அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
நம் காலம் கடிதங்களைப் படிக்கப் பழகும் பருவம் தொட்டே எழுதப் பழகாத ஒரு சந்ததியினை உருவாக்கிவிட்டது. இன்றைக்கும் டைரி எழுதும் பழக்கமுடையவர்களைப் போல் நானும் அவளிடம் எழுதிக் காண்பித்திருக்கிறேன், சில காதல் கடிதங்களை. தினமும் பூங்காவில் சந்திக்கும் பொழுது படித்துக் காண்பித்திருக்கிறேன். மீண்டும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன்.
நான் கல்லூரிக் காலங்களில் வரைந்த சில ஓவியங்களையும் கூட அவளிடம் காண்பித்து அவள் இரசிப்பதை நானும் இரசித்திருக்கிறேன். எனினும் அவளுடைய புன்னகைக்கு ஈடாக ஒரு ஓவியத்தை என்னால் வரைய இயலாமலே போனது.
காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் அவளைத் தோழியாய்ப் பார்க்குமுன்னமே என்னுள் அது கிளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அது காதல் சம்பந்தப்பட்டதென்பதாலோ என்னவொ பின்னாளில் அவள் மீதான கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவனாகிவிட்டேன். அடக்கிவாசிக்கத் தெரியாத காதல் ஆதிவாசி நான். வீணையின் நரம்புகளைத் தீண்டாமல் இசையெழுப்ப முடியாதென்று அவளுக்குப் புரியவைக்க விரும்பவில்லை.
சில நேரங்களில் எதற்கும் பதிலளிக்கமாட்டாள். என் மீது மௌனத்தைக் காறி உமிழ்வாள் பிறர் பார்த்து பரிகசிக்கும்படி. நானோ காதலியிடம் முத்தம் பெற்றபின் உதடுகளைத் துடைத்துக் கொள்ளும் காதலனைப் போல் நடந்துகொள்வேன். என் இத்தனை காதல் அனுபவங்களின் ஊடே எத்தனை காத்திருப்புகள், எத்தனை கைபேசி இடையூறுகள், எத்தனை பெறப்படாத பதில்கள், எத்தனை கேட்கப்படாத கேள்விகள் என்பது எண்ணிலடங்கா. இருந்தும் காதல் என்ற அந்த ஒற்றை நூல் அறுந்து விழாமல் தொங்கப் பழகும் பக்குவத்தைப் பெற்றிருந்தேன்.
என் உலகைச் சுருட்டி மடித்து வாய்க்குள் வெற்றிலையாய்ப் போட்டு மென்றவள் அவள். வெந்து சிவந்தவன் நான் தான். காதலின் முதல் சந்திப்பில் இருந்த தீவிரம் எனக்குள் வெறியாய் மாறிக்கொண்டிருந்தது. அவளுக்குள் அது நீர்த்துக் கொண்டிருந்ததை நான் அறியாமலில்லை. என் காத்திருப்புகள் அவளின் நிராகரிப்புகளாக மாற எத்தனை காலம் பிடிக்கும்? பதிலற்ற கேள்விகளுக்காய் நான் ஏன் காத்துக் கிடக்கிறேன்? அவள் இட்டுத் தொடங்கி வைத்த புள்ளிகளினூடே நான் கோலமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன் முற்றுப்புள்ளி இருக்கும் திசையறியாமல்.
அன்றொரு நாள் மாலை பூங்கா செல்லும் வழியில் இறுக்கமான முகத்துடன் என் மேல் வீசியெறிந்த காதல் வார்த்தைகளை அள்ள முயன்றாள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைப்பதைப் போல் கேட்கக் கூடாத இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டுத்தொலைத்தாள்.
"நாம் பிரிந்து விடலாமா, அருண்?"
அவள் கேட்ட முதல் கேள்வி என்னைத் தொட்டிலில் போட்டது.
அந்த இரண்டாவது கேள்வி என்னைத் தூக்கில் போட்டது.
பிரிய மனமின்றி தொங்கும்...
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
நம் காலம் கடிதங்களைப் படிக்கப் பழகும் பருவம் தொட்டே எழுதப் பழகாத ஒரு சந்ததியினை உருவாக்கிவிட்டது. இன்றைக்கும் டைரி எழுதும் பழக்கமுடையவர்களைப் போல் நானும் அவளிடம் எழுதிக் காண்பித்திருக்கிறேன், சில காதல் கடிதங்களை. தினமும் பூங்காவில் சந்திக்கும் பொழுது படித்துக் காண்பித்திருக்கிறேன். மீண்டும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன்.
நான் கல்லூரிக் காலங்களில் வரைந்த சில ஓவியங்களையும் கூட அவளிடம் காண்பித்து அவள் இரசிப்பதை நானும் இரசித்திருக்கிறேன். எனினும் அவளுடைய புன்னகைக்கு ஈடாக ஒரு ஓவியத்தை என்னால் வரைய இயலாமலே போனது.
காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் அவளைத் தோழியாய்ப் பார்க்குமுன்னமே என்னுள் அது கிளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அது காதல் சம்பந்தப்பட்டதென்பதாலோ என்னவொ பின்னாளில் அவள் மீதான கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவனாகிவிட்டேன். அடக்கிவாசிக்கத் தெரியாத காதல் ஆதிவாசி நான். வீணையின் நரம்புகளைத் தீண்டாமல் இசையெழுப்ப முடியாதென்று அவளுக்குப் புரியவைக்க விரும்பவில்லை.
சில நேரங்களில் எதற்கும் பதிலளிக்கமாட்டாள். என் மீது மௌனத்தைக் காறி உமிழ்வாள் பிறர் பார்த்து பரிகசிக்கும்படி. நானோ காதலியிடம் முத்தம் பெற்றபின் உதடுகளைத் துடைத்துக் கொள்ளும் காதலனைப் போல் நடந்துகொள்வேன். என் இத்தனை காதல் அனுபவங்களின் ஊடே எத்தனை காத்திருப்புகள், எத்தனை கைபேசி இடையூறுகள், எத்தனை பெறப்படாத பதில்கள், எத்தனை கேட்கப்படாத கேள்விகள் என்பது எண்ணிலடங்கா. இருந்தும் காதல் என்ற அந்த ஒற்றை நூல் அறுந்து விழாமல் தொங்கப் பழகும் பக்குவத்தைப் பெற்றிருந்தேன்.
என் உலகைச் சுருட்டி மடித்து வாய்க்குள் வெற்றிலையாய்ப் போட்டு மென்றவள் அவள். வெந்து சிவந்தவன் நான் தான். காதலின் முதல் சந்திப்பில் இருந்த தீவிரம் எனக்குள் வெறியாய் மாறிக்கொண்டிருந்தது. அவளுக்குள் அது நீர்த்துக் கொண்டிருந்ததை நான் அறியாமலில்லை. என் காத்திருப்புகள் அவளின் நிராகரிப்புகளாக மாற எத்தனை காலம் பிடிக்கும்? பதிலற்ற கேள்விகளுக்காய் நான் ஏன் காத்துக் கிடக்கிறேன்? அவள் இட்டுத் தொடங்கி வைத்த புள்ளிகளினூடே நான் கோலமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன் முற்றுப்புள்ளி இருக்கும் திசையறியாமல்.
அன்றொரு நாள் மாலை பூங்கா செல்லும் வழியில் இறுக்கமான முகத்துடன் என் மேல் வீசியெறிந்த காதல் வார்த்தைகளை அள்ள முயன்றாள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைப்பதைப் போல் கேட்கக் கூடாத இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டுத்தொலைத்தாள்.
"நாம் பிரிந்து விடலாமா, அருண்?"
அவள் கேட்ட முதல் கேள்வி என்னைத் தொட்டிலில் போட்டது.
அந்த இரண்டாவது கேள்வி என்னைத் தூக்கில் போட்டது.
பிரிய மனமின்றி தொங்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக