அக்டோபர் 19, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஏழு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு

முற்றுப்பெற்ற காதல் கதைகள் தொடருவதில்லை என்று யார் சொன்னார்கள்?

பழைய நாளிதழ்களையும் பழைய பொருட்களையும் எடைக்குப் போட்டுவிடும் நாம் பழைய காதலை என்ன செய்கிறோம்?

இன்றைய காலகட்டத்தில் முகநூலிலோ அகநூலிலோ எங்கோ ஓர் மூலையில் பழைய காதலி ஒழிந்து கிடக்கத்தான் செய்கிறாள்.

இருவேறு திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய முன்னால் காதலர்கள் சிற்சில ஆண்டுகளுக்குப் பின் ஓர் பயணத்தில் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால் என்னவாகும்? பூமி தட்டையாகவே இருந்திருக்கலாம் என்றுகூட தோன்றும்.

உலகிற்குத் தெரியாமல் கரைந்துபோன ஒருவனின் காதல் கதை பின்னொரு நாளில் மனைவிக்குத் தெரியாமல் மீண்டும் தொடருமா தொடராதா என்று‌ யார் கண்டது?

 அந்நாளில் அவள் தந்த காதல், நட்பென்ற ஒரு குளத்தில் கல்லெறியும் சலனத்தைத் தந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எதிர்பாராமல் சந்தித்த வேளை, ஒரு ஆழ்கடலின் அமைதியைக் குலைக்கும் பூகம்பத்தால் எழும் ஆழிப்பேரலையாக, சுனாமியாக என் உள்ளத்தில் ஒரு சலனத்தை, அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தது.

கணவனனென்றார்;
கட்டிய மனைவியென்றார்;
கற்பென்றார்;
கள்ளத்தனமென்றார்;

நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தது நான் செய்த தவறா? இல்லை நாங்கள் செய்த தவறா? தெளிந்த நீரோடையை திடீரென்று காட்டாற்று வெள்ளம் நுரைக்க வைத்து கதியற்று ஓடச் செய்வது போல் ஆகிவிட்டது மனம்.

பழைய காதலி மின்னலாய் வந்து மீண்டும் மறந்து போகலாம். நம்மை விட்டு மறைந்தும் போகலாம். ஆனால் அது என் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக இருவருக்கும் ஒரே அலுவலகத்தின் வெவ்வேறு தளங்களில் வேலை செய்யும் நிலை வருமென்று விதிகூட அறிந்திருக்காது.

அவளும் நோக்கினாள், அவனும் நோக்கினான் என்ற போக்கில் மீண்டெழுந்து மனச்சிறையில் மன்றாடிக்கிடந்து தவித்துக் கொண்டிருந்தது ஒரு பழைய காதல்.

 - சலனம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக