அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
என்னை அன்று மயக்கிய அந்தப் புதுநிறம் இன்று அவள் முகத்தில் காணக்கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்துபோயிருந்தது. ஆடம்பரம் அவள் ஆடைகளில் தெரிந்தது. எப்பொழுதும் போல் முகத்தில் அது இல்லை. காலம் அவளை வெகுவாக உருமாற்றியிருந்தது.
சக ஊழியர் ஒருவர் மூலம் அறிந்த ஒரு தகவல் என் மீதான அடுத்தகட்ட தாக்குதல். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இத்தனை நாள் வேலையில் கொண்டிருந்த ஈடுபாடு எங்குபோனதென்று தெரியவில்லை. அலுவலகத்தின் வாயிலில் வைக்கும் முதல் காலடி தடுமாற்றத்துடனே துவங்குகியது.
வீட்டில் கட்டிய மனைவியும், அலுவலகத்தில் முன்னால் காதலியும் இரவு பகல் போல மாறி மாறி என்னை முற்றுகையிடும் மர்மம் என்ன?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா?
----
இரண்டு மனம் வேண்டும்.
இறைவனிடம் கேட்டேன்.
நினைத்து வாழ ஒன்று.
மறந்து வாழ ஒன்று.
இப்பொழுது புரிகிறது இதுபோன்ற பாடல்கள் யாருக்காக எழுதப்பட்டன என்று.
ஓடி ஒதுங்கி வாழ்ந்தவன் இன்று பதுங்கி ஒழிந்து வாழ்வதில் என்ன நியாயம்
இருக்கிறது?
மழையும் வெயிலும் மாறி மாறி வரலாம். இரண்டும் ஒரு சேரத்தோன்றி என் முன் ஒரு வானவில் நிறமற்று விரிகிறது. கிரகணம் போல் இருட்டிக்கொண்டு வருகிறது. என் செய்வேன்?
நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் இல்லாத நிலை என்ன நிலை?
இடி இடிக்கிறது; மின்னல் வெட்டுகிறது; மழைவர மறுக்கும் நிலை என்ன நிலை?
என்றோ அடைய விரும்பிய காதலி இன்றளவும் கரை சேராமல் இருக்கிறாள். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனக்குத் திருமணமாகியிருக்கும் என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும்.
இரண்டு வாரங்கள் இப்படியே கழிந்தன. அலுவலக வாயிலில் ஒரு மாலைநேரத்தில் கொட்டும் மழை நின்றபின் வீடு செல்ல காத்து நின்றேன்.
"அருண்! நீ இங்கு தான் வேலை செய்கிறாய் என்று முன்னரே தெரிந்திருந்தால் இங்கு நான் வேலைக்குச் சேர்ந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடு" என்று கூறிவிட்டு இமைக்கும் கணத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் அவள் என்னைக் கடந்து சென்றாள்.
அன்று மாலை இடியுடன் கூடிய அடைமழை என் நெஞ்சுக்குள் பெய்ய ஆரம்பித்தது.
- மழை இன்னும் பெய்யும்
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
என்னை அன்று மயக்கிய அந்தப் புதுநிறம் இன்று அவள் முகத்தில் காணக்கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்துபோயிருந்தது. ஆடம்பரம் அவள் ஆடைகளில் தெரிந்தது. எப்பொழுதும் போல் முகத்தில் அது இல்லை. காலம் அவளை வெகுவாக உருமாற்றியிருந்தது.
சக ஊழியர் ஒருவர் மூலம் அறிந்த ஒரு தகவல் என் மீதான அடுத்தகட்ட தாக்குதல். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இத்தனை நாள் வேலையில் கொண்டிருந்த ஈடுபாடு எங்குபோனதென்று தெரியவில்லை. அலுவலகத்தின் வாயிலில் வைக்கும் முதல் காலடி தடுமாற்றத்துடனே துவங்குகியது.
வீட்டில் கட்டிய மனைவியும், அலுவலகத்தில் முன்னால் காதலியும் இரவு பகல் போல மாறி மாறி என்னை முற்றுகையிடும் மர்மம் என்ன?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா?
----
இரண்டு மனம் வேண்டும்.
இறைவனிடம் கேட்டேன்.
நினைத்து வாழ ஒன்று.
மறந்து வாழ ஒன்று.
இப்பொழுது புரிகிறது இதுபோன்ற பாடல்கள் யாருக்காக எழுதப்பட்டன என்று.
ஓடி ஒதுங்கி வாழ்ந்தவன் இன்று பதுங்கி ஒழிந்து வாழ்வதில் என்ன நியாயம்
இருக்கிறது?
மழையும் வெயிலும் மாறி மாறி வரலாம். இரண்டும் ஒரு சேரத்தோன்றி என் முன் ஒரு வானவில் நிறமற்று விரிகிறது. கிரகணம் போல் இருட்டிக்கொண்டு வருகிறது. என் செய்வேன்?
நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் இல்லாத நிலை என்ன நிலை?
இடி இடிக்கிறது; மின்னல் வெட்டுகிறது; மழைவர மறுக்கும் நிலை என்ன நிலை?
என்றோ அடைய விரும்பிய காதலி இன்றளவும் கரை சேராமல் இருக்கிறாள். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனக்குத் திருமணமாகியிருக்கும் என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும்.
இரண்டு வாரங்கள் இப்படியே கழிந்தன. அலுவலக வாயிலில் ஒரு மாலைநேரத்தில் கொட்டும் மழை நின்றபின் வீடு செல்ல காத்து நின்றேன்.
"அருண்! நீ இங்கு தான் வேலை செய்கிறாய் என்று முன்னரே தெரிந்திருந்தால் இங்கு நான் வேலைக்குச் சேர்ந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடு" என்று கூறிவிட்டு இமைக்கும் கணத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் அவள் என்னைக் கடந்து சென்றாள்.
அன்று மாலை இடியுடன் கூடிய அடைமழை என் நெஞ்சுக்குள் பெய்ய ஆரம்பித்தது.
- மழை இன்னும் பெய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக