விட்டகொற தொட்டகொறையா
விழியோரம் தேங்குறத
உன் மகபுள்ளபேரன் நான்
உனக்காக எழுதிவச்சேன்.
முழுசா மூப்படஞ்சு
உருவம் உருக்கொலஞ்சு
ஒடம்ப கழட்டிப்போட்டு
ஊர்கோலம் போனவளே!
உன் சாவுக்கு வந்தவுக
வைரம் பாய்ஞ்ச கட்டயினு
வாய்க்கு வாய் சொன்னாக.
கட்ட வேகுமுன்ன
சொத்த கணக்குப்பாக்கும்
கேடுகெட்ட ஒலகமிது.
நீ ஏழேழு தலமுறைக்கும்
எழுதிவச்ச சொத்தெல்லாம்
பிடிச்சுவச்ச உன் உசுருதான்டி.
இப்ப அது பிரிஞ்சிபோனது பிடிக்கல.
வெளிப்பார்வை, ஒலகத்துக்கு
வெலகிப்போயி மறஞ்சிருக்க.
மரணம் ஒடம்புக்குத்தான்,
மனசெல்லாம் நெறஞ்சிருக்க.
சேதிகேட்டு சென்னையில
பதறாமத்தானிருந்தேன்.
ஊருவந்து பாக்கயில
ஒதறுதடி நெஞ்சமெல்லாம்.
நீ இல்லாத அறையிலெல்லாம்
சொல்லாத கதையெல்லாம்
செல்லாத காசாட்டம்
பழங்கதையாப் போனதடி.
ஊருக்கும் நாட்டுக்கும்
வரலாறு பலவுண்டு.
என் வீட்டுக்கும் காட்டுக்கும்
சரித்திரம் நீதானே.
தாந்தோன்றி மலைப்பக்கம்
வேரூன்றி வந்தவளே!
என் தாய்வழிச் சீதனமே!
தென்னவளே! மாருதமே!
ஓம்மகள நீ வளத்த.
அவமகளயும் நீதான் வளத்த.
பத்தாக்கொறைக்கு
அவமக, என் தங்கச்சியயும்
நீதான் சொமந்த.
தண்டுவடம் வளஞ்சுபோயி
நீ தடுமாறித் திரியையில,
கழுவி உன்னக் குளிப்பாட்டி
தாயானா தங்கச்சி.
கொழந்தயா மாறிப்போன
எங்கொலசாமி நீதானே.
சூரியன கும்பிடாம
ஓன் ஒலகம் விடியாது.
ஓங்கதய கேக்காம
ஏன் இரவும் முடியாது.
எஞ்சீயானின் பேர கேட்டோம்,
நீ சாகும்வர சொல்லலியே.
செத்தைய கும்பிடுன்னு
சுருக்கமா சொல்லிப்புட்டு
புருசன்பேர புதிரா தந்துபுட்டு
பூமியவிட்டுப் போனவளே!
குப்புசாமி பொஞ்சாதி
தவறிடுச்சுன்னு ஊர்பூராம்
நீ செத்த சேதியோட
சீயான் பேரும்
சேர்ந்தே வந்ததடி!
மருமக்க வீடுகள்ல
கை நனைக்க கூடாதுன்னு
வேப்பம்பழம் சுள்ளி பொறுக்கி
சந்தையில வித்த பணம்,
பென்ஷன்காசு ஐநூறும்
மாசாமாசம் வாங்கி வச்சு
சொந்தமா ஓட்டுவீட்டில்
சொகமா வாழ்ந்தவளே!
உன் வைராக்கியத்துக்கு முன்னால
இந்த உலகமெலாம் தவிடுபொடி.
கொலையாம சோறு வடிச்சு
கூட்டுரசம் பொரியல் செஞ்சு
எலந்தப்பழ மிட்டாய் தட்டி
என் ஒருத்தனுக்கா படச்சவளே!
கரூருக்கு ஒருவாட்டி
காந்தி வந்த கத சொன்ன.
கையெடுத்துக் கும்பிட்டுட்டு
அண்ணல் போன வழி சொன்ன.
எம்சியாரு சிவாசின்னா
எம்பூட்டு உசுருனக்கு.
உன் சந்ததிக்குத் தெரியாதா
நீ சகலகலா இரசிகையின்னு.
என்ன பெத்தவளின்
ஆத்தாளப் பெத்தவளே!
நான் பெத்தவள பாக்குமுன்ன
பரலோகம் போனவளே!
உன் அஞ்சாம் தலைமுறைய
நீ அருகயிருந்து பாக்கலயே!
இருந்தாலும் நெனச்சுகிட்டேன்,
அடுத்த தலமுறையா
அவதரிச்சு வந்தவளே,
எம்மகளா பொறந்து வந்த
மீனாட்சி நீதான்னு.
விழியோரம் தேங்குறத
உன் மகபுள்ளபேரன் நான்
உனக்காக எழுதிவச்சேன்.
முழுசா மூப்படஞ்சு
உருவம் உருக்கொலஞ்சு
ஒடம்ப கழட்டிப்போட்டு
ஊர்கோலம் போனவளே!
உன் சாவுக்கு வந்தவுக
வைரம் பாய்ஞ்ச கட்டயினு
வாய்க்கு வாய் சொன்னாக.
கட்ட வேகுமுன்ன
சொத்த கணக்குப்பாக்கும்
கேடுகெட்ட ஒலகமிது.
நீ ஏழேழு தலமுறைக்கும்
எழுதிவச்ச சொத்தெல்லாம்
பிடிச்சுவச்ச உன் உசுருதான்டி.
இப்ப அது பிரிஞ்சிபோனது பிடிக்கல.
வெளிப்பார்வை, ஒலகத்துக்கு
வெலகிப்போயி மறஞ்சிருக்க.
மரணம் ஒடம்புக்குத்தான்,
மனசெல்லாம் நெறஞ்சிருக்க.
சேதிகேட்டு சென்னையில
பதறாமத்தானிருந்தேன்.
ஊருவந்து பாக்கயில
ஒதறுதடி நெஞ்சமெல்லாம்.
நீ இல்லாத அறையிலெல்லாம்
சொல்லாத கதையெல்லாம்
செல்லாத காசாட்டம்
பழங்கதையாப் போனதடி.
ஊருக்கும் நாட்டுக்கும்
வரலாறு பலவுண்டு.
என் வீட்டுக்கும் காட்டுக்கும்
சரித்திரம் நீதானே.
தாந்தோன்றி மலைப்பக்கம்
வேரூன்றி வந்தவளே!
என் தாய்வழிச் சீதனமே!
தென்னவளே! மாருதமே!
ஓம்மகள நீ வளத்த.
அவமகளயும் நீதான் வளத்த.
பத்தாக்கொறைக்கு
அவமக, என் தங்கச்சியயும்
நீதான் சொமந்த.
தண்டுவடம் வளஞ்சுபோயி
நீ தடுமாறித் திரியையில,
கழுவி உன்னக் குளிப்பாட்டி
தாயானா தங்கச்சி.
கொழந்தயா மாறிப்போன
எங்கொலசாமி நீதானே.
சூரியன கும்பிடாம
ஓன் ஒலகம் விடியாது.
ஓங்கதய கேக்காம
ஏன் இரவும் முடியாது.
எஞ்சீயானின் பேர கேட்டோம்,
நீ சாகும்வர சொல்லலியே.
செத்தைய கும்பிடுன்னு
சுருக்கமா சொல்லிப்புட்டு
புருசன்பேர புதிரா தந்துபுட்டு
பூமியவிட்டுப் போனவளே!
குப்புசாமி பொஞ்சாதி
தவறிடுச்சுன்னு ஊர்பூராம்
நீ செத்த சேதியோட
சீயான் பேரும்
சேர்ந்தே வந்ததடி!
மருமக்க வீடுகள்ல
கை நனைக்க கூடாதுன்னு
வேப்பம்பழம் சுள்ளி பொறுக்கி
சந்தையில வித்த பணம்,
பென்ஷன்காசு ஐநூறும்
மாசாமாசம் வாங்கி வச்சு
சொந்தமா ஓட்டுவீட்டில்
சொகமா வாழ்ந்தவளே!
உன் வைராக்கியத்துக்கு முன்னால
இந்த உலகமெலாம் தவிடுபொடி.
கொலையாம சோறு வடிச்சு
கூட்டுரசம் பொரியல் செஞ்சு
எலந்தப்பழ மிட்டாய் தட்டி
என் ஒருத்தனுக்கா படச்சவளே!
கரூருக்கு ஒருவாட்டி
காந்தி வந்த கத சொன்ன.
கையெடுத்துக் கும்பிட்டுட்டு
அண்ணல் போன வழி சொன்ன.
எம்சியாரு சிவாசின்னா
எம்பூட்டு உசுருனக்கு.
உன் சந்ததிக்குத் தெரியாதா
நீ சகலகலா இரசிகையின்னு.
என்ன பெத்தவளின்
ஆத்தாளப் பெத்தவளே!
நான் பெத்தவள பாக்குமுன்ன
பரலோகம் போனவளே!
உன் அஞ்சாம் தலைமுறைய
நீ அருகயிருந்து பாக்கலயே!
இருந்தாலும் நெனச்சுகிட்டேன்,
அடுத்த தலமுறையா
அவதரிச்சு வந்தவளே,
எம்மகளா பொறந்து வந்த
மீனாட்சி நீதான்னு.