["சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையில்..." என்ற பாடலின் மெட்டில் ஒரு புதிய பாடல் எழுதும் என் சிறியதோர் முயற்சி]
இரவில் வரும் கனவில் வரும்
எதிரில் எழில் உருவம்,
என்னுயிரில்
அது வரையும் பின் மறையும்,
இனிதில் இது இனிது, இனி
எளிதில் என்னெதிரில் வருமோ?
காதல் அது மலரும்
கவிகள் பல எழுதும்
கரைந்தே பல நொடிகள் சில
உறைந்தே உருகும்.
மதியில் சில மனதில் சில
மயக்கம் தரும் மதுபோல்
வீழ்ந்தே இது
மடியும் பருவம்.
கடலில் வரும் புயல்போல் அதன்
கரையில் வரும் அலைபோல்
எனை தொடர்ந்தே தொடரும்.
பதிலில் அவள் பதிலில்
மௌனம் அது சலனம்
என் மனதில் அது பதியும்
ஒரு பதியம்
அது படர்ந்தே தினம் வளரும்.
ஒரு நிலையில்
என் நினைவில் அவள்
வழியில் வரும் வழியில்
மணலில் எழும் மணமும்
பொழியும் சிறு மழையும்.
அவள் பாதம் படும் தடங்கள்
அதில் மலர்கள் அவை மலரும்.
அவள் இதழில் அதன் இடையில்
மின்னும் ஒரு ஒளிபோல்
பெய்யும் துளி பனியும்
அதில் உய்யும் என்னுலகும்
அது மாய்ந்தே போகும்.
அவள் விழியில் அதன் ஒளியில்
ஒரு தயக்கம் எழும் என்னில்,
எனை இயக்கும் அது மயக்கும்.
வெட்கம் அது இறக்கும்
மோகம் அது பிறக்கும்
இரவை அது குடிக்கும்
விடியும் வரை தகிக்கும்.
உதிரும் ஒரு முத்தம்
அதில் சிதறும் சில முத்தும்
சிகையில் வரும் வாசம்
அது நுகரும் சொர்க்கம்.
மஞ்சம் அது நனையும்
தஞ்சம் புகும் தனலில்
உடலில் சில நொடியில்
புதிதாய் ஒரு பிரளயம் நிகழும்.
விடியும் அப்பொழுதில்
கனவும் அது களையும்.
உடைகள் அவை மறந்தே
சில அடிகள் அவள் நடந்தே
வான்வில்லாய் மெல்ல மறைந்தாள்.
மீண்டும் அவள் வருவாளென
மீண்டே எழுவேன் அனுதினமும்.
எழுந்தும் நான்
எழுதும் இக்கவியும்
இவ்வரியில் முடிவடையும்,
அது தொடர்ந்தே தொடரும்.
இரவில் வரும் கனவில் வரும்
எதிரில் எழில் உருவம்,
என்னுயிரில்
அது வரையும் பின் மறையும்,
இனிதில் இது இனிது, இனி
எளிதில் என்னெதிரில் வருமோ?
காதல் அது மலரும்
கவிகள் பல எழுதும்
கரைந்தே பல நொடிகள் சில
உறைந்தே உருகும்.
மதியில் சில மனதில் சில
மயக்கம் தரும் மதுபோல்
வீழ்ந்தே இது
மடியும் பருவம்.
கடலில் வரும் புயல்போல் அதன்
கரையில் வரும் அலைபோல்
எனை தொடர்ந்தே தொடரும்.
பதிலில் அவள் பதிலில்
மௌனம் அது சலனம்
என் மனதில் அது பதியும்
ஒரு பதியம்
அது படர்ந்தே தினம் வளரும்.
ஒரு நிலையில்
என் நினைவில் அவள்
வழியில் வரும் வழியில்
மணலில் எழும் மணமும்
பொழியும் சிறு மழையும்.
அவள் பாதம் படும் தடங்கள்
அதில் மலர்கள் அவை மலரும்.
அவள் இதழில் அதன் இடையில்
மின்னும் ஒரு ஒளிபோல்
பெய்யும் துளி பனியும்
அதில் உய்யும் என்னுலகும்
அது மாய்ந்தே போகும்.
அவள் விழியில் அதன் ஒளியில்
ஒரு தயக்கம் எழும் என்னில்,
எனை இயக்கும் அது மயக்கும்.
வெட்கம் அது இறக்கும்
மோகம் அது பிறக்கும்
இரவை அது குடிக்கும்
விடியும் வரை தகிக்கும்.
உதிரும் ஒரு முத்தம்
அதில் சிதறும் சில முத்தும்
சிகையில் வரும் வாசம்
அது நுகரும் சொர்க்கம்.
மஞ்சம் அது நனையும்
தஞ்சம் புகும் தனலில்
உடலில் சில நொடியில்
புதிதாய் ஒரு பிரளயம் நிகழும்.
விடியும் அப்பொழுதில்
கனவும் அது களையும்.
உடைகள் அவை மறந்தே
சில அடிகள் அவள் நடந்தே
வான்வில்லாய் மெல்ல மறைந்தாள்.
மீண்டும் அவள் வருவாளென
மீண்டே எழுவேன் அனுதினமும்.
எழுந்தும் நான்
எழுதும் இக்கவியும்
இவ்வரியில் முடிவடையும்,
அது தொடர்ந்தே தொடரும்.
